All Stories

பட்டதாரி பயிலுநர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவருக்கு நற்செய்தி

பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்ள தகுதியிருந்தும் 24/11/2020, 11.12.2020 மற்றும் 05.01.2021 அகிய தினங்கள் வௌியாகிய பெயர் பட்டியலில் இடம்பிடிக்காத பட்டதாரிகளை அடுத்த கட்டமாக இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என்று அபிவிருத்தி சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளரும் பட்டதாரிகள் மத்திய நிலையத்தின் அழைப்பாளருமான சந்தன சூரியாராய்ச்சி அறிவத்துள்ளார்.

பட்டதாரி பயிலுநர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவருக்கு நற்செய்தி

நிருவாக சேவை வெற்றிடங்களுக்கு தகுதி பெற்றவர் விபரம்

இலங்கை நிருவாக சேவை தரம் 111 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை 2018 (2020) யில் தோற்றி, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வௌியாகியுள்ளன.

நிருவாக சேவை வெற்றிடங்களுக்கு தகுதி பெற்றவர் விபரம்

பட்டதாரி பயிலுநர்களுக்கான பயிற்சிகாலம் குறைக்கப்படுமா?

பட்டதாரி பயிலுநர்களுக்கான பயிற்சி காலத்தை ஆறு மாதங்களாக குறைத்து பயிற்சி நிறைவில் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

பட்டதாரி பயிலுநர்களுக்கான பயிற்சிகாலம் குறைக்கப்படுமா?

பயிற்சி நிறைவு செய்த பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக்கடிதங்கள் விரைவில்

பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், தொடர்ந்தும் உங்கள் உரிமைகளை மீட்டெடுக்க போராட தயாராகவுள்ளோம் என்று அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கத்தின் செயலாளரும் பட்டதாரிகள் தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளருமான சந்தன சூரியராய்ச்சி தனது முகநூல் பக்க்தில் தெரிவித்துள்ளார்.

பயிற்சி நிறைவு செய்த பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக்கடிதங்கள் விரைவில்

பயிலுநர் பட்டதாரிகள் சேவையிடங்களை நிராகரித்தால் வாய்ப்பை இழக்கும் சாத்தியம்

பட்டதாரி பயிலுநர்களை தற்காலிக சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் கவனத்திற்கொள்ள விடயங்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்ஜே.ஜே. ரத்னசிறி அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

பயிலுநர் பட்டதாரிகள் சேவையிடங்களை நிராகரித்தால் வாய்ப்பை இழக்கும் சாத்தியம்

பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் உள்வாங்குவதில் அநீதி

2019ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபைக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமன கடிதத்தில் நியமனத் திகதி 2021 ஜனவரி முதலாம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் உள்வாங்குவதில் அநீதி

பட்டதாரி பயிலுநர்களின் தகுதிகாண் பரீட்சை ஆரம்பம்

தற்போது நாட்டில் நிலவும் சுகாதார நிலைமை காரணமாக பட்டதாரி பயிலுநர்களை நேரில் அழைத்து தகுதிகாண் பரீட்சை நடத்த முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. எனினும் இச்செயற்பாட்டை விரைவில் நிறைவு செய்யும் நோக்கில் பொது சேவை ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் பயிலுநர் அதிகாரிகள் அழைக்கப்படாமல் தகுதிகாண் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

 

குறித்த அதிகாரிகளுக்கு ஒன்லைன் ஊடாக தகுதிகாண் பரீட்சை முன்னெடுக்கப்பட்டது. ஒரு வார குறுகிய காலத்தினுல் 12,000 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அமைச்சுக்கு அனுப்பவேண்டியுள்ளது.

 

சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் கணனி மென்பொருளில் உள்ளடக்கப்படவுள்ளது. இந்நிலையில் ஆவணங்களில் குறைப்பாடுகள் இருப்பின் அவற்றை பரிசோதிப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே கடந்த வாரம் ஒன்லைன் மற்றும் தொலைபேசியூடாக அதிகாரிகள் பட்டதாரி பயிலுநர்களை தொடர்புகொண்டு தகவல் பெற்று வருகின்றனர். (மிக அவசிய தேவை கருதியே குறித்த தொடர்புகள் ஏற்படுத்திக்கின்றமையை கருத்திற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.)

பட்டதாரி பயிலுநர்களின் தகுதிகாண் பரீட்சை ஆரம்பம்

பயிலுநர் பட்டதாரி நியமனம் பெற்றவரா? உங்களுக்கே இந்த அழைப்பு...

குறைக்கப்பட்டுள்ள மகப்பேற்று விடுமுறை தினங்கள் தொடர்பில் உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்த விரும்புகிறவர்கள் எம்முடன் இணையுங்கள் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அதன் முகப்புத்தகத்தில் பயிலுநர் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பயிலுநர் பட்டதாரி நியமனம் பெற்றவரா? உங்களுக்கே இந்த அழைப்பு...

தொழில் தரத்தை மேம்படுத்த கோரி போராடவுள்ள பட்டதாரிகள்

பட்டதாரிகள் உட்பட அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய தொழில் கௌரவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் தரத்தை மேம்படுத்துமாறு கோரி தேசிய எதிர்ப்பு ​போராட்டமொன்றுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அனைத்து பட்டதாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் மார்ச் 4ம் திகதி மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக நன்பகல் 12.00 மணிக்கு இவ்வெதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவும் மாவட்டச் செயலாளர்களிடம் கையளிக்கப்படுகிறது.

march 4

 

தொழில் தரத்தை மேம்படுத்த கோரி போராடவுள்ள பட்டதாரிகள்

போட்டி பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான விசேட சந்திப்பு

வட மேல் மாகாணத்தில் ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் நியமனம் வழங்குமாறு கோர ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

போட்டி பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான விசேட சந்திப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image