1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை.
All Stories
இன்று பல தொழிலாளர்கள் தொழிற்சங்க மயமாக்கல் மற்றும் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றி அறியாமல் உள்ளனர், இதற்கு முக்கிய காரணம் தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் பேரணிகள், போராட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகளாகவே காணப்படுகின்றமையேயாகும்.
வேலை உலகில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித சர்வதேச உடன்படிக்கையும் இல்லாமை இந்த சமவாயத்திற்கு விசேட மதிப்பு கிடைப்பதற்கு பிரதான காரணமாகும்.
பொலிஸாரின் சேவை தொடர்பான கடமைகள் மற்றும் உரிமைகள் பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளில் 1866 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கபொலிஸ் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சட்டங்களும் ஆண் பெண் இருபாலாருக்கும் சமமாக பொருந்துவதுடன், பெண்களுக்காக விசேடமாக குறிப்பிடப்பட்ட பல சட்டங்கள் எமது நாட்டின் சட்டத்தில் உள்ளன.
தொழில்துறை சார் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான தொழில்துறை பொறிமுறை மற்றும் அதன் நன்மைகள் பற்றி உங்களுக்கு அறியப்படுத்தவே இந்த முறை வேலைத்தளம் சட்டப் பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
1. தொழிலாளர் தீர்ப்பாயம் ((Labor Tribunal) என்றால் என்ன?
தொழிலாளர் தீர்ப்பாயம் ஒரு பாதி நீதித்துறை அமைப்பாகும். 1957ஆம் ஆண்டின் 62ஆம் இலக்க தொழில் முரண்பாடுகள் திருத்தச் சட்டத்தின் கீழ் 1958ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த தீர்ப்பாயத்தில் உள்ள வழக்குகள், அதன் தலைவர் பதவியை வகிக்கும் மேலதிக நீதிவான் பதவியில் உள்ள நீதித்துறை அதிகாரியால் தீர்த்து வைக்கப்படுகின்றது.
2. தொழிலாளர் தீர்ப்பாயத்தின் பிரதான நோக்கம் என்ன?
இது ஒரு பணியாளரின் வேலைவாய்ப்பானது, ஒரு தொழில்வழங்குனரால் (முதலாளி) நியாயமற்ற முறையில் நிறுத்தப்பட்டால், அந்த பணியாளருக்கு நிவாரணம் வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு தொழிலாளர் பொறிமுறையாகும். தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தீர்ப்பாயத்தின் முன் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். தற்போது இலங்கை முழுவதும் 30க்கும் மேற்பட்ட தீர்ப்பாயங்கள் உள்ளன.
3. தொழிலாளர் தீர்ப்பாயத்தின் அதிகாரங்கள் என்ன?
தொழில்துறை முரண்பாடுகள் சட்டத்தின் பிரிவு 31 b (1) இன்படி, தொழிலாளர் தீர்ப்பாயம் நியாயமான மற்றும் சமமான கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரிவு 31 b (4)இன் கீழ் பணியாளர்களுக்கும் தொழில்வழங்குனருக்கும் இடையே எட்டப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை விட அதிகமாக இந்த தீர்ப்பாயம் நிவாரணம் வழங்கலாம். அதாவது, தொழிலாளர் தீர்ப்பாயம் ஊழியருக்கு நியாயமான முறையில் நிவாரணங்களை வழங்கக்கூடியதாகும்.
4. தொழிலாளர் தீர்ப்பாயத்தில் விண்ணப்பத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
தொழில்துறை முரண்பாடுகள் சட்டத்தின் பிரிவு 31 b (1) இன் அடிப்படையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு பணியாளர்தான் பணிநீக்கம் செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அவர் தொழிற்சங்க உறுப்பினராக இருந்தால், தனிப்பட்ட வழக்கறிஞர் அல்லது தொழிற்சங்க பிரதிநிதியால் விண்ணப்பம் செய்ய முடியும்.
5. தொழிலாளர் தீர்ப்பாயத்தினால் வழங்கக்கூடிய நிவாரணங்கள் என்ன?
தொழில்துறை முரண்பாடு சட்டத்தின் பிரிவு 33இன் கீழ் பின்வரும் நிவாரணங்கள் வழங்கப்படலாம்.
1 - நிலுவைத் தொகையுடன் மீண்டும் வேலை\வாய்ப்பு
2 - நிலுவைத் தொகை இல்லாமல் மீண்டும் பணியமர்த்தல்
3 - மீண்டும் பணியமர்த்தப்படுவதற்குப் பதிலாக நியாயமான இழப்பீடு வழங்குதல்
4 - 15க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள பணியிடங்களில் மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானித்தல்
5 - மேலதிக கொடுப்பனவு பணத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விலக்குகளை தீர்மானித்தல்
6. தொழிலாளர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வது எப்படி?
தொழில்துறை முரண்பாடு சட்டத்தின் பிரிவு 31 c (1) இன்படி, தொழிலாளர் சங்கத்தின் முடிவே இறுதியானது. அத்தகைய முடிவை அதன் அதிகார வரம்பில் உள்ள பிரச்சினையில் மேன்முறையீடு செய்ய முடியாது மற்றும் சட்டப் பிரச்சினையில் மாகாண உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்யலாம். தீர்ப்பாயத்தின் தீர்ப்பிலிருந்து 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யப்பட வேண்டும். மேற்படி மாகாண உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம். மேலும், தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தொழிலாளர் ஆணையர், நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அமுல்படுத்தலாம்.
7. முதலாளிமார் சம்மேளனம் ( (Employers Federation)) என்றால் என்ன?
இது வெறுமனே முதலாளிமார் சங்கம் அல்லது நிறுவனங்களுக்கான தொழிற்சங்கம் என்று அழைக்கப்படலாம். தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தொழிற்சங்கமாகவும் இது அறியப்படுகிறது. தற்போது இந்தச் சங்கத்தில் 525க்கும் மேற்பட்ட அங்கத்துவ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
8. முதலாளிமார் சம்மேளனத்தினால் அதன் உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் என்ன?
இது ஒரு நிறுவனத்தில் எழும் அனைத்து தொழிலாளர்கள் முரண்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்குகிறது, தொழில்துறை உறவுகளைப் பேணுதல், மனித வளங்களை நிர்வகித்தல் மற்றும் தேவைப்பட்டால், அதன் உறுப்பு நிறுவனங்களுக்கும் சட்ட ஆலோசனைகளை வழங்குதலாகும்.
தொழில்துறை சார்ந்த வழக்குகளில் தொழில்துறை நீதிமன்றங்கள், நடுவர் மன்றம் , தொழிலாளர் தீர்ப்பாயங்கள், தொழிலாளர் திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முதலாளிமார் உறுப்பினர் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துதலாகும்.
தொழிற்சங்கங்களுடன், குறிப்பாக கூட்டு ஒப்பந்தம் பேசும் செயல்பாட்டில், சட்ட சிக்கல்களை தெளிவுபடுத்துதல் மற்றும் இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்தல் என்பனவாகும்.
அரச அதிகாரிகளின் மனித உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய சட்டரீதியான பரிகாரங்கள் என்ன என்பது தொடர்பான கருத்தியலை உங்களுக்கு வழங்குவதற்கு இம்முறை 'வேலைத்தளம்' சட்ட பக்கத்தின் ஊடாக தீர்மானித்து இருக்கின்றோம். நீங்கள் அரச ஊழியராயின் உங்களது அறிவுக்கு இந்த தகவல்கள் மிகவும் முக்கியமானவையாகும்.
கேள்வி -1
1939 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மகப்பேறு உதவி கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுபவர்கள் யாவர்?
பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசுபொருளாக மாறியுள்ள விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தவுள்ளோம்.
தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில், அது தொடர்பாக தொழில் திணைக்களத்திற்கு முறையிடுவதற்கான விண்ணப்பப்படிவம் தொடர்பில் பலரும் அறிந்திருப்பதில்லை.