All Stories

கனடாவில் கடந்த மாதம் 41,000  தொழில்வாய்ப்புகள் இணைப்பு

தொழில்வாய்ப்புகள் நாட்டில் வலுவான மக்கள்தொகை வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதால், கனேடிய பொருளாதாரத்தில், கடந்த மாதம் 41,000  தொழில்வாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனடாவில் கடந்த மாதம் 41,000  தொழில்வாய்ப்புகள் இணைப்பு

துருக்கி நிலஅதிர்வில் 4300 இற்கும் அதிகமானவர்கள் பலி!

​நேற்று அதிகாலை தென் கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற நில அதிர்வில் இதுவரை 4300 இற்கும் அதிமானவர்கள் உயிரிழந்ததுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிஸி செய்தி வௌியிட்டுள்ளது.

துருக்கி நிலஅதிர்வில்  4300 இற்கும் அதிகமானவர்கள் பலி!

மெக்ஸிகோவில் கடும் வெப்பம் - நூறு பேர் வரை மரணம்!

மெக்ஸிகோவில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை காரணமாக சுமார் நூறு பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்ஸிகோவில் கடும் வெப்பம் -  நூறு பேர் வரை மரணம்!

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகு விபத்துக்குள்ளானதில் 34பேரைக் காணோம்!

கடந்த வௌ்ளிக்கிழமை துனிஸியா கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 34 ஆப்பிரிக்க நாட்டவர்கள் காணமல் போயுள்ளனர் என்று துனிஷிய அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

இரண்டு நாட்களில் இடம்பெற்ற ஐந்தாவது படகு விபத்து இதுவாகும். இவ்விரண்டு நாட்களுக்குள் சுமார் 67 பேர் வரை உயிரிந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பில் இத்தாலி கரையோரப்பாதுகாப்புப் படையினர் ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு கருத்து வௌியிடுகையில் இரு வெவ்வேறு விபத்துக்களில் கடந்த வியாழக்கிழமை தெற்கு இத்தாலி கடற்பரப்பில் 750 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காப்பாற்ற ஒரு மணி நேரத்துக்குள் சட்டவிரோதமாக துனிஷிய கடற்பரப்பை கடந்து இத்தாலியை அடைய முயன்ற படகு விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்ததுடன் 33 பேர் வரை காணமல் போயுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

ஸ்வாக்ஸ் நகர கடற்பரப்பில் விபத்துக்குள்ளனான படகு விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்னளர் என்று துனிஷிய நீதிபதியொருவர் ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களஞக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிவந்த 56 படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அவற்றில் சுமார் அழைத்து வரப்பட்ட சுமார் 3000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய பாதுகாப்பு அதிகாரியான ஹுசேம் ஜபாலி தெரிவித்துள்ளார்.

ஐநா தகவல்களுக்கமைய, இந்த ஆண்டு மட்டும் சுமார் 12,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் துனிஸியா ஊடாக இத்தாலியை சென்றடைந்துள்ளனர். இதுவே 2022ம் ஆம் ஆண்டளவில் இக்காலப்பகுதியில் 1,300 பேர் மாத்திரமே இவ்வாறு இத்தாலியில் அடைக்கலம் புகுந்துள்ளனனர். ஆரம்பத்தில் லிபியா ஊடாவே குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக பயணித்தனர். தற்போது துனிஸியாவின் ஸவாக்ஸ் நகரம் பிரதான புறப்படு நகரமாக காணப்படுகிறது. உள்நாட்டு யுத்தம் மற்றும் வறுமை நிலவும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை தேடி ஐரோப்பாவை வந்தடைகின்றனர்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகு விபத்துக்குள்ளானதில் 34பேரைக் காணோம்!

பங்களாதேஷ் தொழிற்சங்கத் தலைவர் அடித்துக்கொலை!

​தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை தொடர்பில் பேச்சுக்களை நடத்த முயன்ற தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் பங்களாதேஷில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் தொழிற்சங்கத் தலைவர் அடித்துக்கொலை!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image