வெளிநாட்டிலிருந்து கடன் பெற்று நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிப்பது பயன் உடையது அல்ல என தெரிவித்து ரயில்வே துறையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பு மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்ததாக ரயில் இயநதிர சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.
All Stories
மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உண்டு பண்ணுவதில் கல்வி மகத்தானது பணியை ஆற்றி வருகின்றது. சகலரும் அறிவு மட்டத்தினை அவரவர் கற்றல் விருத்திக்கேற்ப ஏற்படுத்திக் கொள்வதற்கு துடுப்பாக காணப்படுகின்றது. கல்வியின் தார்ப்பரியம் பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருக்கு வேண்டிய அதேவேளை கல்விக்கான முக்கியத்துவத்தினையும் அதனை பெற்றுக்கொள்ளும் விதங்கள் அடிப்படையிலும், அவற்றை பயன்படுத்தும் விதத்திலும் வெளிப்படுத்தப்படுகின்றது எனலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு கல்வியானது சர்வதேசமட்டத்தில் வியாபித்த ஒரு கருப்பொருளாக காணப்படுவதோடு அதற்கான தினமாக ஜனவரி 24 ஆம் திகதி சர்வதேச கல்வித்தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவ்வாண்டுக்கான தொனிப்பொருள் ' கொவிட் -19 தலைமுறைக்கான கல்வியை மீட்டெடுத்து புத்துயிர் பெறுங்கள்' (‘Recover and Revitalize Education for the COVID-19 Generation’) என்பதாகும்.
ஒவ்வொரு தனிமனிதரும் வாழ்வில் முன்னேற்றமடைவதற்கு ஏதோவொன்றினை கற்பது கட்டாயமாக்கப்படுகின்றான். இதில் கல்வி பலதரப்பட்ட வகைப்பாடுகளை கொண்டு, புத்தகக்கல்வி, தொழிற்கல்வி, அனுபவக்கல்வி ஆன்மீகக் கல்வி, சர்வதேச ரீதியான கடப்பாடுகளை பின்பற்றுதல் என்பன உள்ளடங்குகின்றன. குறிப்பாக கல்வியின் உன்னதத்தன்மையினை விளங்கிக்கொள்ளும் வகையில் சர்வதேச மட்டத்தில் வியாபகப்படுத்துவதற்கு அதற்கான தினத்தினை யுனெஸ்கோ அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.
கல்வியின் முக்கியத்துவம்
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளையோர்களை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள், தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.
கற்றுக் கொடுக்கப்படுகின்ற கல்வி எதற்காக, கல்வியின் நோக்கம் என்ன என்பன பற்றிய கருத்துக்கள் பலவாக இருக்கின்றன. அறிவாற்றல், மன விடுதலை, பண்பாட்டு அடையாளம், வேலை வாய்ப்பு, வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வது போன்றவை கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றும் சிலர், கல்வியின் நோக்கம் ஒருவரை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக ஆக்க வேண்டும்; அவர் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு மேம்பாட்டுக்கும் பாடுபட உதவ வேண்டும் என்றும் கருதுகின்றனர்.
சிறந்த தொடர்பு என்பது கல்வியில் மற்றொரு பங்கு. கல்வி ஒரு நபரின் பேச்சை மேம்படுத்துகிறது மற்றும் செம்மைப்படுத்துகிறது. தனிநபர்கள் கல்வியுடன் தொடர்பு கொள்வதற்கான பிற வழிகளையும் மேம்படுத்துகின்றனர். மேலும், கல்வி ஒரு நபரை தொழில்நுட்பத்தின் சிறந்த பயனராக ஆக்குகிறது. கல்வியின் உதவியுடன் மக்கள் மிகவும் முதிர்ச்சியடையவதோடு, அவை படித்தவர்களின் வாழ்க்கையில் நுழைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி தனிநபர்களுக்கு ஒழுக்கத்தின் மதிப்பைக் கற்பிக்கிறது. படித்தவர்களும் நேரத்தின் மதிப்பை அதிகம் உணர்கிறார்கள். இதனால் படித்தவர்களுக்கு நேரம் என்பது பணத்திற்கு சமம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
குறிப்பாக, கல்வி எனும்போது பாடசாலை, மாணவர்கள், கற்றல் அடைவு மட்டம் என்ற விடயமானது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும். இவை தனிமனிதர் அடிப்படையிலும் நாடுகள் அடிப்படையிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையை பொறுத்தவரை 1948ஆம் ஆண்டு தொடங்கி இலங்கையில் இலவசக் கல்வி வழங்கப்பட்டு இன்றுவரை அதன் பலனை பலர் அனுபவித்து வருகின்றனர். பாடசாலை தொடங்கி பல்கலைக்கழகம் வரை சகல கல்வி நடவடிக்கைகளும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றமை அவர்கள் அதனை உணர்ந்து சிறப்பான விளைவுகளை தருகின்றனரா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
கல்வி தொடர்பான புதிய மாற்றங்களை உள்வாங்குவதில் தயக்கம்
இலங்கையை பொறுத்தவரையில் கல்வியின் அவசியத்தை உணர வேண்டிய கட்டாயத்தில் தற்காலம் நகர்ந்து செல்கின்றது. குறிப்பாக பல்வேறு ஆட்சிமாற்றங்கள், கல்விக் கொள்கைகளின் வருகை, தொழில்நுட்பவியல் மாற்றம் என்பன இதில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. மாணவர்கள் இவ்வாறான விடயங்களை உள்வாங்குவதில் பின்னடைவை எதிர்கொள்கின்றமை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரை அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருக்கின்றமையால் கல்வி தொடர்பான புதிய மாற்றங்களை உள்வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றது. குறிப்பாக, புதிய ஆட்சி மாற்றங்களின் போது பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்துகின்றபோதும் அதனை முழுமைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதோடு, இடைநடுவே கைவிடப்படுகின்ற நிலையும் ஏற்படுகின்றன. (உ-ம்) ஆயிரம் பாடசாலை திட்டம், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, சுரக்ஷா திட்டம் என்பன இவற்றில் சிலவாகும்.
சர்வதேச மட்டத்திலான புதிய விடயங்களை உள்வாங்குவதற்கு இலங்கை முன்வரவேண்டும். இதில் தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் பங்களிப்பினை வழங்குதல் வேண்டும். எனினும் தனியார் கல்விக்கு ஊக்குவிப்பு வழங்காமல் இலவசக் கல்விக்கு ஊக்குவிப்புக்களை வழங்குவது அவசியமானதாக காணப்படுகின்றது. அண்மைக் காலங்களில் கொரோனாவினால் நாட்டின் கல்வி நிலைமைகள் பாரிய பின்னடைவினை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விநிலை சார்ந்த தரப்புக்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அதாவது 2020ஆம் ஆண்டில் மாத்திரம் 30,000 பாடசாலை மாணவர்கள் இடைவிலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா பெருந்தொற்றும் - இணையவழி கற்றலும்
கல்வி என்பது மாணவர் சமுதாயத்திற்கும் ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் இன்றியமையாத ஒரு விடயமாகும். மாணவர்கள் காலம் காலமாக தமது கல்வி நடவடிக்கைகளை நேரடியானதொரு கற்றல் வழிமுறையின் ஊடாகவே மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த வழிமுறையானது மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சரியான புரிதலையும் விளக்கத்தையும் வழங்கியிருந்தது. எனினும் தற்போதைய சூழலில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டு பாடசாலை, பல்கலைக்கழகங்கள் தமது கல்வி நடவடிக்கைகளை ஒன்லைன் (ழுடெiநெ) இணைய வழி மூலமாக முன்னெடுத்து வருகின்றன.
மேலைத்தேய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறையானது இன்று இலங்கையிலும் கால் பதித்துள்ளது. இதனுடைய பிரதான நோக்கமாக அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மாணவர்களின் குறித்த ஆண்டு அல்லது பருவத்திற்கான பாடத் திட்டங்களை பூர்த்தி செய்து அவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்து சீரான கல்வியினை வழங்குவதாகும். இலங்கையைப் பொருத்தமட்டில் பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்கள் இக்கல்வி முறையை துரிதமாக முன்னெடுத்து வருகின்றன.
மாணவ சமுதாயத்திற்கு பாரிய சவால்
ஏனைய நாடுகளில் மாணவர்களுக்கு இக்கல்வி முறையானது வெற்றி அளித்திருந்தாலும் இலங்கையைப் பொருத்தமட்டில் மாணவ சமுதாயத்திற்கு பாரிய சவாலாகவே இணையக் கல்வி பார்க்கப்படுகின்றது. இதுவரை காலமும் இலங்கை மாணவர்கள் இக்கல்வி முறை தொடர்பான அறிவினையோ, தேவைப்பாட்டினையோ கொண்டிருக்கவில்லை திடீரென அறிமுகம் செய்யப்பட்ட கல்வி முறையால் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது, கலந்து கொள்வது, தொழில்நுட்ப சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் இன்றுவரை மாணவர்கள் பல சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
பாடசாலை கல்வியை நம்பி இருந்த மாணவர் சமூகம் இன்று தனியார் வகுப்புக்களையும் இணைய வழிக்கல்வியின் மோகத்தாலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதில் பொருளாதார பிரச்சினைகள், கல்வியை இடைநடுவில் கைவிடல், முறையற்ற பழக்க வழக்கங்கள், மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் பாதிக்கப்படல் போன்றன இடம்பெறுகின்றன. கல்வியானது அறிவு, திறன், மனப்பாங்கு, ஆளுமை அடிப்படையில் விருத்தியடையச் செய்யக்கூடிய ஒன்றாக இருக்கின்ற அதேவேளை அதனை முறையற்ற விதத்தில் அணுகுவது பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது.
எனவே உலக நாடுகளை பொறுத்தமட்டில் கல்வியானது சகலவற்றுக்கும் அடிப்படையாக காணப்படுகின்றது. வெறுமனே நூல் கல்விக்கு மாத்திரம் முக்கியத்துவமளிக்காமல் செயன்முறைக்கல்வி, தொழில்நுட்ப கல்வி என்பனவற்றிற்கு சிறப்பான இடம் அளிக்கப்படுகின்றது. ஜப்பான், சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தொழிற்கல்வி முறைக்கு கூடிய கவனமளிக்கப்படுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்தி சிறந்த கல்வி முறையில் தங்கியுள்ளது
மேலும், பின்லாந்து உலகில் சிறந்த கல்வி முறையில் இருப்பதாகவும் கல்வித்துறையில் உலகில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ள நாடாகவும் பெயரிடப்பட்டுள்ளது. 'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு' (ழுஊநுனு) மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ஆய்வினை மேற்கொண்டபோது பெறப்பட்ட முடிவாக பின்லாந்து நாடு கல்வியில் முதலிடத்தில் காணப்படுகின்றது. இதில் உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் காணப்படுகின்றது. உலகில் மிகப் பெரிய பொருளாதார, இராணுவ வல்லரசான ஐக்கிய அமெரிக்காகூட பின்லாந்தின் கல்வி முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்தி அந்நாட்டின் சிறந்த கல்வி முறையில் காணப்படுகின்றது என பின்லாந்து உலகிற்கு பறைசாற்றுகின்றது. எனவே உலக நாடுகளின் கல்வித்தரங்கள் நாளுக்கு நாள் மாற்றம் பெற்று விருத்தியடைந்து வருகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு புதிய கல்வி திட்டங்கள் இலங்கையிலும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கல்வியினால் ஒரு நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. அது போலவே, பொருளாதார நிலையும் கல்வியின் தரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. அனைவருக்கும் தரமான கல்வி அளித்தால், அது நல்ல பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் என்று கூறப்படுகின்றது. ஏழை நாடுகள் கல்வியின் மீது கவனம் செலுத்தினால், பொருளாதாரத்தில் விரைவில் மேம்பாடு அடையலாம்; எவ்வாறு எனில், முன்னேறிய நாடுகளில் கிடைக்கும் கல்வி அறிவு, தொழில் நுட்பங்கள் ஆகியனவற்றை இறக்குமதி செய்து, முன்னேற்றுத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இது எளிதான காரியம் அல்ல என்பது பிறகு தெரிய வந்தது. நல்ல கல்விக்கும், தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவதற்கும் நல்ல திறமையுள்ள மனித வளமும், அதை ஊக்குவிக்கும் பொருளாதார நிறுவனங்களும் வேண்டும். இவற்றின் ஊடாக பாராபட்சமற்ற பணிகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய கல்வி முறைகளை மாற்றி, புதுக்கல்வி கொள்கை
தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உலகம் மிக வேகமாக மாறி வருகின்றது. அதனால், நம் பழைய அறிவு புதிய காலத்திற்குப் பயனற்றதாகப் போய் விடுகின்றது. பல்வேறு நாடுகள் பழைய கல்வி முறைகளை மாற்றி, புதுக்கல்வி கொள்கைகளை வகுத்து கொள்கின்றன. மேலும், கல்வி என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் ஆனது என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இதனூடாக கல்வியின் உன்னத்தன்மையினை உணர்ந்து சிறந்த சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் வாழ்நாள் நீடித்த வகையில் கல்வியினை தொடர்ந்து முன்னெடுப்பது தனிமனித ரீதியிலும், சமூகம் ரீதியிலும் பல புத்தாக்கங்களை கொண்டுவருவதோடு சிறந்த அபிவிருத்தியை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமைகின்றது.
- சி.அருள்நேசன்
கல்வியல் சிறப்பு கற்கை
கிழக்குப் பல்கலைக்கழகம்
WhatsApp நிறுவனம் அதன் புதிய Privacy Policy யை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பில் பலருக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. பாவனையாளர்கள் தொடர்ந்து இதனை பயன்படுத்துவதா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர். அக்குழப்பங்களுக்கான பதிலை அந்நிறுன உயரதிகாரி twitter இல் வௌியிட்டுள்ள விளக்கத்தினை தமிழ் வடிவில் தருகிறார் எமது முகநூல் நண்பர் A.R.M அசாருதீன். பல்வேறு தேவைகளுக்காக WhatsApp பயன்படுத்தும் நாம் இது குறித்து அறிந்திருப்பது பயன்பதரும் என்று நம்புகிறோம்.
கேள்வி - நான் இன்னொருவருடன் Chat செய்யும் விடயங்களை WhatsApp நிறுவனம் Facebook உடன் பகிருமா?
பதில் - இல்லை. WhatsApp நிறுவனத்தின் புதிய Privacy Policy ஆனது Chat விடயத்தில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை. அது முன்னர் இருந்தது போன்று End to End Encrypt இலேயே இருக்கும். அதாவது, நாம் Chat செய்வதை மூன்றாம் நபர் ஒருவர் பார்வையிட முடியாது. அதேநேரம், நாம் Chat செய்வதும் WhatsApp நிறுவனத்தின் Server களில் பதியப்படாது. அது நமது Mobile Device களிலும், நமது Backup சேவைகளில் மட்டுமே இருக்கும்.
கேள்வி - WhatsApp நிறுவனம் நமது உண்மையான Location தகவல்களை பகிருமா?
பதில் - இல்லை, நாம் இருக்கும் இடம் தொடர்பான Approximate தகவல் மாத்திரமே அது பகிரும். WhatsApp பயன்படுத்துபவர்களின் Location தகவல்கள் அனுப்புனருக்கும், பெறுநருக்கும் இடையில் பாதுகாக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களது நண்பர் ஒருவருக்கு Live Location பகிர்ந்தால் அது Facebook இடம் பகிரப்படாது. ஆனால், உங்களது தொலைபேசி எண், IP Address மூலம் WhatsApp சேகரிக்கும் Approximate Location தகவல்கள் Facebook இடம் பகிரப்படும்.
கேள்வி - WhatsApp நிறுவனம் நான் அனுப்பும் Media Files (Ex. Pictures, Videos and Audios) தங்களது Server இல் சேகரிக்குமா?
பதில் - இல்லை, இதற்கும் பதில் முதல் கேள்வி போன்றே End to End Encrypt இருப்பதால் எதுவும் சேமிக்கப்படாது. ஆனால், நீங்கள் அனுப்பும் ஒரு Media File தற்காலிகமாக WhatsApp Server களில் சேமிக்கப்படும். இதற்கு காரணம் Media Files Forward செய்யப்படும் போது Efficiency ஆன Delivery ஒன்றை வழங்கும் நோக்கம் இருப்பதாகும்.
கேள்வி - WhatsApp விளம்பரங்களை போடுமா?
பதில் - இப்போதைக்கு இல்லை. ஆனால், எதிர்காலத்தில் Banner Ads வருவதற்கான வாய்ப்பு உண்டு. அப்படி எதிர்காலத்தில் விளம்பரங்கள் வரும் போது WhatsApp மீண்டும் அதன் Privacy Policy இணை மாற்றும்.
கேள்வி - WhatsApp நான் Video, Audio Call பேசும் போது அதனை அவதானிக்குமா?
பதில் - இல்லை. இதில் பயன்படுத்தப்படும் Data உம் End to End Encrypt செய்யப்படுவதால், உங்களது எந்த Call களையும் WhatsApp நிறுவனம் Record செய்யாது. அதோடு, அதனை மூன்றாம் நபர் ஒருவருக்கும் கேட்க முடியாது.
கேள்வி - WhatsApp நான் அனுப்பும் தகவல்களை பதிவு செய்கின்றதா?
பதில் - இல்லை, முன்னர் சொன்னது போன்று எந்த Text Messages களையோ எந்த Media Files களையோ WhatsApp தனது சொந்த Server இல் களஞ்சியப்படுத்துவதில்லை. இவை Offline பாவனைக்காக உங்களது Device இல் சேமிக்கப்பட்டிருக்கும். அதேநேரம், நீங்கள் உங்கள் WhatsApp தகவல்களை Backup செய்திருந்தால் அந்த தகவல்கள் உங்களது Google கணக்கிற்கோ, அல்லது iCloud கணக்கிற்கோ செல்லும். இங்கே நீங்கள் தான் உங்களது தகவல்களை மூன்றாம் நபர் ஒருவருக்கு பகிர்கின்றீர்கள். இங்கேயும் உங்களது தகவல்கள் பறிபோகும் எனப் பயந்தால் Backup செய்யாமல் இருக்கலாம்.
~ARM. Azarudeen
நாட்டிற்கு புதிய அரசியல் யாப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இன்றைய அரசாங்கம் அரசியல் யாப்பு நிபுணர்கள் குழுவொன்றினை நியமித்துள்ளதுடன்
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பேச்சு வார்த்தைகள் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இன்று உலகில் காணப்படும் அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்கள் பணிபுரிகின்றனர். சாதாரண உடல் உழைப்பு முதல், விண்வெளி ஆய்வு வரை பெண்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக காணப்படுகின்றது.
தனியார் துறைகளில் அதாவது ஸ்தாபனமயமற்ற மற்றும் முறைசாரா தொழிற்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக காணப்படுகின்றது. இப்பெண் தொழிலாளர்களை ஸ்தாபனமயமான தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அணித்திரட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை.
இவர்கள் ஓரிடத்தில் தொடர்ச்சியாக வேலை செய்யாமல் இருக்கின்றமையினால் தொழிற்சங்கங்கள் இவர்களை அணித்திரட்டுவதில்லை. தனியார் துறை தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் கடை, பணிமனைச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டிருந்தாலும்கூட தொழில் தருநர்களால் இவ்வுரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இவர்களது தொழில் உரிமை மீறல்களுக்கு பிரதான காரணம் இவர்கள் தொழிற்சங்க ரீதியில் அணித்திரளாமல் இருப்பதுடன், தொழில் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வின்மையுமேயாகும். அதுமட்டுமன்றி அரசத்துறையாக இருந்தாலென்ன தனியார் துறையாக இருந்தாலென்ன அதிகமான பெண்கள் வேலைத்தளத்தில் பாலியல் சீணடல்களுக்கு ஆளாகின்றனர்.
தனியார் மற்றும் அரச துறைகளில் பணிபுரியும் பெண்கள் வேலைத்தளத்தில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிய போதிலும், அதற்கெதிராக முறைபபாடுகள் செய்வதில்லை. அத்துடன் பாலியல் சீண்டல்கள் என்றால் என்ன மற்றும் அவ்வாறு நடைபெற்றால் அதுபற்றி முறையிடுவதற்கு உரிய இடமின்மை போன்ற காரணங்களால் பெண்கள் சகித்துக்கொண்டு பணியாற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்விடயம் பற்றி பெண்கள் தற்போது பேச ஆரம்பித்துள்ளதுடன், உலக தொழிலாளர் ஸ்தாபனம் பாலியல் சுரண்டல்கள் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது. அதேவேளை பாலியல் சீண்டல்கள் தொடர்பாக சமவாயம் 190 என்பதனை பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் பாலியல் சுரண்டல்கள் எவரால் மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றியும் விவரித்துள்ளது. அதன்படி,
- பெண்களுக்கு ஆண்களால் நிகழும் சீண்டல்கள்
- ஆண்களுக்கு பெண்களால் நிகழும் சீண்டல்கள்
- ஓரே பால் (பெண்கள் பெண்களை, ஆண்களை ஆண்கள்) சீண்டல் செய்தல்
- சக துன்புறுத்தல்
- மேற்பார்வையாளர்களால் கீழ் நிலை ஊழியர்களை சீண்டலுக்குட்படுத்துதல்
- கீழ் நிலை ஊழியர் /ஊழியர்கள் மேற்பார்வையாளரை சீண்டலுக்குட்படுத்துதல்
- ஊழியர் அல்லாத ஒருவர் அதாவது வாடிக்கையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், விற்பனையாளர்கள், புறச்சேவை ஊழியர்கள் மற்றும் சேவை வழங்குனர் ஆகிய மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் துன்புறுத்தல்
- பௌதீக ரீதியான (உடல்) சீண்டலுக்கான உதாரணங்கள்
- தேவையற்ற முறையில் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தல்
- தேவை இல்லாமல் ஒருவருடன் நெருங்கி நிற்றல் (அருகாமையில் நெருக்கமாக நிற்றல்)
- தொடுதல், பாசமாக செல்லமாக பேசுதல், தொட்டு தடவுதல், உடலை அழுத்துதல், கட்டிப்பிடித்தல் அல்லது கிள்ளுதல்
- ஒருவரது பிறப்புறுப்பை தேய்த்தல் அல்லது உரசல்
- பாலியல் வன்புணர்ச்சி
- வாய்மொழி மூலமான பாலியல் சீண்டல்
- பாலியல் கருத்துக்கள் அல்லது குறிப்புக் கூறல்
- ஒருவரின் பாலியல் அடையாளத்தை அல்லது ஒருவரது பாலினத்தை கேலி செய்தல்
- ஒருவரின் உடல் தோற்றம், வயது, தனிப்பட்ட வாழ்கை, அவர்களின் வாழ்கை நிலை அதாவது அவர் திருமணமானவரா அல்லது திருமணமாகதவரா மற்றும் குழந்தை பேரு உள்ளமை அல்லது இல்லாமை ஆகியவை பற்றி கருத்து கூறல்
- ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொடர்புடைய நகைச்சுவைகள் அல்லது கதைகள் கூறல், ஒருவரின் பாலியல் ரீதியான கனவு, கற்பனைகளை விசாரித்தல்
- வேலை தொடர்பான கலந்துரையாடல்களை பாலியல் ரீதியான தலைப்புகளுக்கு திசைமாற்றல்
- பாலியல் ரீதியான உபகாரங்களை கேட்டல்
- வேலை வாய்ப்பிற்காக பாலியல் ரீதியான உபகாரங்களை கேட்டல்
- விசில் அடித்தல் அல்லது பாலியல் ரீதியான ஒலியை எழுப்புதல்
- ஆபாசமான மற்றும் அபத்தமான மொழியை பிரயோகித்தல்
- அடையாளமற்ற தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தல்
- விரும்பத்தகாத சமூகம்சார் அழைப்பை மீண்டும் மீண்டும் செய்தல்
- அவதூறுகள் மற்றும் வதந்திகளை பரப்பல் மற்றும் அதை பற்றி அரட்டை செய்தல் (புறம்பேசல்)
- பாலியல் ரீதியான சைகைகள்
- வெறித்து பார்த்தல், ஏளனமாக வெறுப்புடன் சாய்வாக நோக்குதல், கீழ் கண்ணால் பார்த்தால், கண்ணடித்தல் அல்லது பார்த்தல்
- பறக்கும் முத்தம் கொடுத்தல், நாக்கை சுழற்றுதல் அல்லது தனது உதட்டை நாக்கால் ஈரப்படுத்துல்
- கைகளால் /விரல்களால் பாலியல் ரீதியான செய்கைகள் செய்தல்
- பாலியல் ரீதியான செயல்களை நடித்துக் காட்டல்
- காட்சிப்படுத்தல் தொடர்பான பாலியல் சீண்டல்
- தேவையற்ற மின்னஞ்சல்கள், குறும்செய்திகள் அனுப்புதல் அல்லது பாலியல் தொடர்புடைய வெளிப்படையான நகைச்சவைகளை பதிவிடல்
- அடையாளம் தெரியாத நபராக கடிதங்கள், மின்னஞ்சல்கள், குறுந்செய்தி அல்லது குறுந்தகவல் அனுப்புதல்.
- முறையற்ற ரீதியாக சமூக வலைத்தளங்களில் முன்னேறுதல்
- பாலியல் ரீதியான வரைபுகள், எழுதுதல்
- பாலியல் ரீதியான படங்கள், புகைப்படங்கள், சுவரொட்டிகளில், நாட்குறிப்பு, கணனி திரை வால்பேப்பர் அல்லது பாலியல் தொடர்பான வலைத்தளங்களை வெளிப்படையாக காட்சிப்படுத்தல்
- வேறு ஒருவருடைய பாலியல் தொடர்புடைய, அவர்களுக்கு தெரியாமல்/ அவர்களின் விருப்பமின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள்/ நிகழ் படங்களை பதிவிடல்
இதேவேளை, பாலியல் சீண்டல்களினால் பெண் தொழிலாளர் முகம் கொடுக்கும் உளரீதியான பாதிப்புக்கள் மற்றும் அது எவ்வாறு அவர்களது பொருளாதாரத்தை பாதிக்கின்றது என்பதுடன், அது எவ்வாறு உற்பத்தித்துறையையும் பாதிக்கின்றது என்பதை விளக்கப்படுத்தியுள்ளது.
பாலியல் சீண்டலினால் ஏற்படும் இழப்பு என்ன?
பாலியல் சீண்டல் செயல் என்பது ஒரு முக்கியமற்ற, வினோதமான, பாதிப்பற்ற செயலல்ல. பாலியல் சீண்டல் என்பது அச்செயலில் ஈடுபட்ட நபர் மற்றும் சம்பவம், சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு நீண்ட கால எதிர்மறையான தாக்கத்தை கொடுக்கும். இது ஒரு பணியாளருக்கு
- பாதுகாப்பு மற்றும் சௌகரியம்
- உடல் ஆரோக்கியம்
- உளவியல் நல்வாழ்வு
- உற்பத்தித்திறன் (தொழில்ரீதியான)
- தொழில் நிபந்தனை மற்றும் தொழில் சூழ்நிலை மற்றும்
- அவள் அல்லது அவனின் உடலுக்கான உரிமை
ஆகியவற்றில் ஒரு மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு ஊழியர் பாலியல் சீண்டல் காரணமாக அதிர்ச்சி, அறுவெறுப்பு, குழப்பம், கோபம், தாழ்மைப்படுத்தல், அவமானம், உதவியற்றநிலை,மனக்கடுப்பு, சுயபரிதாபம், பலவீனமாக பாதிப்படையக்கூடியவராக, மனக்கசப்பு, மனக்கலக்கம் மற்றும் மனஉளைச்சல் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். இது ஒரு ஊழியரை உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதனால் அவள் / அவனின் வேலையில் ஊக்கநிலையற்ற நிலை, வருகைத்தராமை மற்றும் உற்பத்தித்திறனை குறைத்தல் ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரு ஊழியருக்கு பாலியல் சீண்டலினால் ஏற்படும் இழப்புகள்
- தொழில் வாய்ப்பை இழத்தல்
- ஊழியர்கள் எரிச்சல் மற்றும் பதட்டத்தில் கோபம், பலமின்மை மற்றும் அவமானத்தை உணர்தல்
- சுயமரியாதையினை இழத்தல்
- சீர்குலைந்த உறவுமுறை
- உளச்சோர்வு, மன அழுத்தம், உயர் குருதி அழுத்தம் மற்றும் வேறுவகையான மன அழுத்தம் தொடர்புள்ள நோய்களுக்கு உள்ளாகுதல்
- போதை மற்றும் மது பழக்கத்தின் மூலம் ஏற்படும் துஸ்பிரயோகம்
- இராஜினாமா
- தற்கொலை
- ஒரு தொழில் தருனருக்கு பாலியல் சீண்டலினால் ஏற்படும் இழப்புகள்
- உற்பத்தித்திறன் குறைதல் (ஊழியர்களின் கவனம் உற்பத்தியில் இல்லாத காரணத்தால்)
- பலவீனமான அல்லது சேதப்படுத்தக்கூடிய தீர்ப்புகள்
- நம்பிகையின்மை
- ஊழியர்கள் கூட்டாக ஒற்றுமையாக செயற்படுதல் குறைதல்
- ஊழியர்கள் தொழில் பட (படை) ஊக்கநிலையை இழத்தல்
- ஊழியர்கள் அதிகமாக வேலைக்கு வருகைதராமை
- விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வேலைத்தளத்தில் அதிகரித்தல்
- திறமையான ஊழியர்களை இழத்தல்
- இடருக்கான செலவு தொடர்பான நிதிநிலை செலவு அதிகரித்தல்
- மருத்துவ செலவு அதிகரித்தல்
- நீதி செயற்பாடுகளுக்கான செலவு அதிகரித்தல்
- நிறுவனம் பற்றிய எதிர்மறையான கருத்து உருவாகுதல்
- நிறுவனத்தில் பாலியல் ரீதியான பாகுபாடு உருவாதல்
வேலைத்தள பாலியல் ரீதியான பாதிப்புகளை இல்லாதொழிக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உறுதிசெய்யும் வகையில் சமவாயம் 190 இனை உலக தொழிலாளர் ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. இப்பிரகடனத்தில் இரண்டு நாடுகளே கையொப்பமிட்டுள்ளன. இலங்கை உட்பட பல நாடுகள் கையொப்பமிடவில்லை. இப்பிரகடனத்தில் கையொப்பம் இடும்படி இலங்கை அரசாங்கத்தினை நிர்ப்பந்திக்க வேண்டியுள்ளது. இதுதொழிற்சங்கங்களினதும், தொழிலாளர்களினதும் கடமையாகும். இப்பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிட்டால் பாலியல் சீண்டல்கள் தொடர்பான புதிய சட்டமொன்றினை இலங்கை அரசாங்கம் உருவாக்க நேரிடும். அப்படி நடைபெறின் இலங்கையின் பெண் தொழிலாளர்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆட்படாத தொழிலாளர்களாக பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும். ஆகையால் பெண் தொழிலாளர்கள் இவ்விடயம் தொடர்பில் தமது குரலை முதலாவதாக ஒலிக்கச் செய்ய வேண்டியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருப்போர் மேற்குறிப்பிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக்கொள்ள விரும்பினால் அல்லது சமவாயம் 190 பற்றிய விழிப்புணர்வை சமூகத்திற்கு எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பதற்கான ஆக்கப்பூர்வமான புதிய வழிமுறைகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பினால் 076 2326600 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் செய்யும் அதேவேளை isdkandy என்ற முகநூல் பக்கத்தை லைக் செய்யலாம்.
நன்றி – யோகேஸ்வரி கிருஷ்ணன்
மூலம் – வீரகேசரி
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 உலகப் பரவலானது 2020 ஆம் ஆண்டில் உலகிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலம்பெயர்தோர்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இலங்கை அரசாங்கம், சமீபத்தில் தனது அபிவிருத்தி மூலோபாயமான தூரநோக்கு 2025| ஐ வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டளவில் 1 மில்லியன் வேலைகளை உருவாக்குதல் என்பது அரசாங்கத்தின் முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் இம்முறையும் திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு தொடர்கின்றது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என தோட்டக் கம்பனிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன.
இன்று (10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இவ்வாண்டுக்கான மனித உரிமைகள் தினமானது சிறப்பாக மீண்டெழுவோம், மனித உரிமைகளுக்காக துணை நிற்போம்' என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.'
உலகம் எவ்வளவுதான் நாளுக்கு நாள் நவீனத்துவம் அடைந்துவந்தாலும் மனிதர்களின் வாழ்வியலில், நாளுக்கு நாள் போராட்டமும் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றது.