போட்டி பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான விசேட சந்திப்பு

போட்டி பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான விசேட சந்திப்பு

வட மேல் மாகாணத்தில் ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் நியமனம் வழங்குமாறு கோர ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் கலந்துரையாட ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அனைவரையும் எதிர்வரும் 20ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு வருகைத் தருபவர்கள் தேசிய ஆள் அடையாள அட்டையின் பிரதி, முதலாவது நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டதற்கான கடிதம், மற்றும் மேன்முறையீடு செய்யப்பட்ட ஆவணத்தின் பிரதி என்பவற்றை கொண்டு வருமாறு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பாளர் தென்னே ஞானனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு 076 671 88 24 (றிஸ்வி)

north western

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image