பட்டதாரி பயிலுநர்களுக்கான பயிற்சிகாலம் குறைக்கப்படுமா?

பட்டதாரி பயிலுநர்களுக்கான பயிற்சிகாலம் குறைக்கப்படுமா?

பட்டதாரி பயிலுநர்களுக்கான பயிற்சி காலத்தை ஆறு மாதங்களாக குறைத்து பயிற்சி நிறைவில் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

17.02.2021 என திகதியிடப்பட்ட கடிதத்தில் இம்மாதம் முதலாம் திகதி சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களுக்கான பயிற்சிகாலத்தை 6 மாதங்களுக்கு மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் ஒரு வருட பயிற்சியானது எவ்வித பயனுமற்ற பயிற்சியாகும். அவர்கள் நியமிக்கும் பயிற்சியில் பணியாற்றுவதுடன் பல்வேறு அரச நிறுவனங்களில் பல்வேறு பல்வேறு தரங்களில் அன்றாட பணித் தேவைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் அவர்களுடைய தொழில் கௌரவம் பாதிக்கப்படுகிறது. அவ்வாற சூழ்நிலை உருவாகாதிருப்பதற்கு பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் முன் பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் பயிற்சியானது போதுமானதாகும்.

இந்தப் பயிற்சிக்காலத்தில் உடல் மற்றும் உள ரீதியாக பட்டதாரிகள் பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் சிறந்த பொது சேவையை வழங்குவதற்கு இது தடையாக இருக்கும என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்று குறிபிடப்பட்டுள்ளதுடன் பல்வேறு விடயங்கள் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image