வௌிநாட்டு பணியாளர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
தன்னை வைத்தியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக பண மோசடி செய்த ஒருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டாரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளார்.
பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு தேசிய தொழில்பயிற்சி சான்றிதழ் NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் நேற்று (01) முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா மற்றும் பிரான்ஸ ஆகிய நாடுகளுக்கிடையில் ஆட்கடத்தல் வியாபாரம் அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டா தெரிவித்தார்.
உடல் உறுப்புகளைப் பெறுவதற்கு மக்களைப் பயன்படுத்துதல், வேலைவாய்ப்பைக் காட்டி சட்டவிரோத வேலைகளை வழங்குதல், பெண்களை விபச்சாரத்திற்குப் பயன்படுத்துதல் என மூன்று பகுதிகளாக மனித கடத்தல் நடைபெறுகிறது.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணம் மூலம் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் வழங்கப்படும் கால அவகாசம் 2023 ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விமான பயணச்சீட்டுகளுக்கான விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் இருந்து சட்டவிரோதமாக நியுசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாடு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோர், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்வதற்கு வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த சிறுவர் பெண்கள் மற்றும் உதவிபுரிந்தவர் உட்பட 17 பேர்கைது செய்யப்பட்டனர்.
இலங்கையர்களுக்கு வருடாந்தம் இத்தாலி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக் கோட்டாவுக்கு இலங்கையில் இருந்து நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என்று இத்தாலிக்கான இலங்கை தூதுவர் தெரியப்படுத்தியுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.