லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு
SLBFE பதிவுக்கு சிறப்புச் சலுகை: 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்
 
லெபனானில் உள்ள இலங்கையர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
 
லெபனானின் தற்போதைய யுத்த நிலைமையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து, லெபனானுக்கு சென்று, பதிவுக் காலம் முடிந்த பின்னர், குறித்த பதிவை புதுப்பிக்காமல் நீண்ட காலமாக பணியில் ஈடுபடும் இலங்கை பணியாளர்களுக்கு இந்த சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
 
08 அக்டோபர் 2024 முதல் 08 ஜனவரி 2025 வரை அதாவது 03 மாத காலத்திற்கு இந்த சலுகைக் காலம் நடைமுறையில் இருக்கும்.
 
குறித்த காலப்பகுதியில், தூதரகத்திற்கு வருவதன் மூலம் பதிவுகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்காக தூதரகத்திற்கு வரும் போது பின்வரும் ஆவணங்களை  கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
01) செல்லுபடியாகும் விசா மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (இந்த ஆவணங்கள் கட்டாயமாகும்)
 
02) தற்போதைய வேலை செய்யும் இடத்திற்கு அமைவான வேலை ஒப்பந்தம் (Current Employment Contract) அல்லது வேலை வழங்குநரால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு கடிதம் (Job Offer Letter) 
 
03) எண் (01) இல் குறிப்பிடப்பட்ட ஆவணங்களை வைத்திருந்தாலும், தற்போதைய தொழில் ஒப்பந்தம் (Current Employment Contract), வேலை வழங்குநரால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு கடிதம் (Job Offer Letter) இல்லாதவர்கள் தூதரகத்தால் வழங்கப்படும்,
சுய அறிவிப்பு படிவத்தை (Self-Declaration) நிரப்ப வேண்டும். அங்கு பதிவு செய்து கொள்ளலாம்.
 
இந்த பதிவு செயல்முறைக்கு 62 டாலர்கள் (USD 62) அரசாங்கக் கட்டணமாக அறவிடப்படுகிறது.
 
இதன்படி, இந்த யுத்த சூழ்நிலையில் வழங்கப்பட்ட விசேட நிவாரணக் காலத்தில் பணியகத்தின் பதிவைப் பெற்று, பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் நலன்புரி மற்றும் காப்புறுதிப் பலன்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் வேலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
 
தூதரகம் இதற்காக விசேடமாக 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும், அதன் பின்னர், அடுத்த 03 மாதங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களிலும் இந்த சேவை கிடைக்கும்.
 
மேலதிக விசாரணைகள்:
00961-81685186/00961-81915603
கௌசி / குமாரி
 
தொழிலாளர் எழுதுவினைஞர் 
2. 00961-79125589
தூதரக உடனடி அழைப்பு இலக்கம்
 
இலங்கை தூதரக காரியாலயம்
பெய்ரூட் - லெபனான்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image