கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த 10 மாதங்களில் 150 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
All Stories
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நுண் நிதி கடன் திட்டத்தை மேலும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் இன்றைய தினம் வரையில் 100,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் நேற்று (31) 21,329 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனக்கா கொவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொத்தமாக நாட்டில் 59, 154 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்தியா Oxford-AstraZeneca - COVISHIELD தடுப்பு மருந்தை இலங்கைக்கு கையளித்ததையடுத்து தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை கடந்த 29ம திகதி நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.e Ministry of Health says that 21,329 frontline healthcare workers were vaccinated with the Oxford-AstraZeneca COVID-19 vaccine yesterday (31), at selected locations across the country.
முன்னுரிமை அடிப்படையில் 150,000 சுகாதாரத்துறை ஊழியர்கள், 120,000 முப்படையினர் மற்றும் பாதுகாப்பத்தரப்பினர் போன்ற கொரோனா தடுப்புப் பணிகளில் முன்னிலை வகிக்கும் ஊழியர்கள் தடுப்பு மருந்து பெற எதிர்பார்த்துள்ளனர். இதனையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட தொற்றாநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தெற்கு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர் 35 வருடங்களின் பின்னர் மீள பெறுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிற்கும் விற்பனை செய்யவோ அல்லது கட்டுபாடு வழங்கப்படவோ மாட்டாது என பிரதமர் குறிப்பிட்டார். அது 100 வீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக தொடர்ந்தும் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜப்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் மருத்துவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு முற்றுபுள்ளி வைபதற்கான உலக தொழிலாளர் தாபனத்தின் C190 பிரகடனத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தன் முக்கியத்துவம் குறித்த பாராளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் எம்பி ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிழக்கு துறைமுக கொள்கலன் முனையம் தொடர்பில், தற்பொழுது இந்திய அரசாங்கம் தெளிவாக புரிந்துக்கொண்டு செயல்படும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முற்றாக துறைமுக அதிகாரசபையின் கீழியங்குவதற்கான அனுமதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இம்மாதம் 15ம் திகதி கொழும்பில் போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பவற்றின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.
பயிற்சி முடிந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பிந்திய திகதியில் நியமனம் வழங்குமாறு கோரி நடத்தப்படவுள்ள இவ்வார்ப்பாட்டத்தையடுத்து பயிற்சியின் பின்னர் இதுவரை நிரந்தர நியமனம் பெறாத பட்டதாரிகள் ஊர்வலமாக செல்லவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.