யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
All Stories
தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி பல்வேறு புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகின்றனர்.
இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது.
இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை பிரதமருடன் கலந்துரையாடல்.
மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.
கடந்த காலங்களில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அவைத்தலைவர் காரியாலயத்தில் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகவும் பயனற்ற முறையிலும் செயற்படுத்தப்பட்டது.
எனவே, புதிய அரசாங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதில் ஏற்படும் தடைகள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நடத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற பணியாளர் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம்
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.
சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் (Voice of plantation people organization) அமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன்.