ஜனநாயக நாடான இலங்கையில் அனைத்து பிரஜைகளுக்கும் ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துகளை வௌியிடுவதற்கான சுதந்திரம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
All Stories
மத்திய மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளுக்கு முன்னர் வினாத்தாள்கள் வௌியாகியமை தொடர்பில் விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
க.பொ.த. உயர்தரத்துக்கு செல்ல முடியாத மலையக இளைஞர், யுவதிகளுக்கு விஷேட தொழிற்பயிற்சித் திட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி பதுளையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள சகல தொழில் வாய்ப்புக்களுக்குமான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளின் போது அரச விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது தொடர்பில் விசேடமாக ஆராய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் எழுதுவது தொடர்பான தீர்மானத்தினால் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை, பாராளுமன்றத்திடமே ஒப்படைக்கப் போவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபையில் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.
தேர்லில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்களுக்கான சம்பளம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிய அங்கத்தவர்கள் இன்று (08) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமாகுவதால், பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஏனைய பரீட்சைகளும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
"பாலின சமூக, சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல்” குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள், முகவரகங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் சேவைகள் தேவைப்படாத நிலையில், அவற்றின் செயற்பாடுகளை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.