மெக்ஸிகோ தடுப்பு மையத்தில் தீ, 39 வௌிநாட்டவர்கள் பலி!

மெக்ஸிகோ தடுப்பு மையத்தில் தீ, 39 வௌிநாட்டவர்கள் பலி!

அமெரிக்க எல்லையில் மெக்‌ஸிகோ நகரில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 39 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள தெரிவித்துளளன.

உள்நாட்டு நேரப்படி இரவு 10.00 மணியளவில் வடக்கு மெக்ஸிகோவின் சிஹுஹாஹோ பிரதேசத்தில் உள்ள தடுப்பு மையத்தில் இடம்பெற்ற தீவிபத்தில் உயிரிழந்த அனைவரும் வௌிநாட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 68 ஆண்கள் குறித்த தடுப்பு மையத்தில் தங்கியிருந்தனர் என்றும் குறித்த தீவிபத்தில் மேலும் 29 வௌிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவரகளுக்கு உள்ளூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image