தொழில் தீர்ப்பாய நீதிமன்றம்

தொழில் தீர்ப்பாய நீதிமன்றம்

தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டால். சட்டப்படி தீர்வு காண்பதற்கான தொழில் நீதிமன்ற அமைப்பு குறித்து அறிந்துகொள்வோம்.

நீங்கள் தனியார் துறையில் பணிபுரிபவராக இருந்தால், இந்த விடயங்கள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

தொழிலாளர் நீதிமன்றம் என்பது ஒரு அரை-நீதித்துறை அமைப்பாகும். தொழில் தகராறுகள் சட்டத்தில் 1957 ஆண்டு திருத்தத்தின் மூலம் தொழிலாளர் தீர்ப்பாயம் நிறுவப்பட்டது. தொழிலாளர் நீதிமன்றம் 1959 இல் செயல்படத் தொடங்கியது.

இந்த தொழிலாளர் நீதிமன்றங்களின் தலைவர் பதவியை வகிக்கும் மேலதிக நீதவான் பதவியில் உள்ள நீதித்துறை அதிகாரிகளால் தீர்ப்பளிக்கப்படுகின்றன.

தொழில் தகராறுகள் சட்டத்தின் பிரிவு 31 C (1) இன் கீழ் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டு, அதன் மூலம் நீதியான மற்றும் நியாயமான தீர்ப்பை வழங்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளிக்கும், தொழில் வழங்குநருக்கும் (முதலாளிக்கும்) இடையே ஏதேனும் தொழில் தகராறு ஏற்பட்டால், தொழில் தகராறு சட்டத்தின் பிரிவு 31 B (1)ன் கீழ் தொழிலாளர் தீர்ப்பாயத்திடம் விண்ணப்பிக்கலாம்.

தொழில் தகராறு சட்டத்தின் 33வது பிரிவின் கீழ் தொழிலாளர் தீர்ப்பாயம் பின்வரும் நிவாரணங்களை வழங்கலாம்.

1. ஊதியத்துடன் மீண்டும் பணியமர்த்தல்

2. நிலுவைக் கொடுப்பனவுடன் மீண்டும் பணியமர்த்தல்

3. நியாயமான இழப்பீடு வழங்குதல்

4. 15 இற்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட பணியிடங்களில் இருந்து பணிக்கொடை வழங்க முடிவு செய்தல்

5. பணிக்கொடையில் இருந்து சட்டத்திற்குப் புறம்பான குறைப்புகள் குறித்து தீர்மானித்தல்

தொழில் தகராறு சட்டத்தின் பிரிவு 31 D (1) இன் படி தொழிலாளர் தீர்ப்பாயத்தின் முடிவு இறுதியானது.

குறித்த முடிவு தொடர்பான கேள்வியின் அடிப்படையில், அந்தத் திர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாது. எனினும், சட்டப் பிரச்சினையின் அடிப்படையில் மாத்திரம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யலாம்.

முடிவு அறிவிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யப்பட வேண்டும்.

மேலும், மாகாண மேல்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

தொழிலாளர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை, தொழில் ஆணையாளரால் நீதவான் நீதிமன்றில் தொடரும் வழக்கின் மூலம் நடைமுறைப்படுத்த நடைமுறைப்படுத்த முடியும்.

தொழிலாளர் தீர்ப்பாயங்களில் உள்ள அனைத்து பரிசீலனைகளும் நீதி மற்றும் நியாயத்தின் கருத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image