அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் ஊடாக 20% சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
All Stories
அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் இன்று (15) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஈரானிடமிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக செலுத்தப்படவேண்டிய கடன் தொகையில், தேயிலையில் விற்பனை மூலம் இதுவரையில், 55 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.
கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, சீன மற்றும் ஜப்பானிய மொழிகளை கற்பிக்க 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
சமீபத்திய வேலைநிறுத்தத்தின்போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம். எம் மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
தேயிலை ஏற்றுமதி மூலம் பெட்ரோல் கடனை கட்டுவது, நற்செய்தி. மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்று (15) நிறைவுக்கு வந்துள்ளது.
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.