2 வாரங்களுக்கு சட்டப்படி வேலை: ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

2 வாரங்களுக்கு சட்டப்படி வேலை: ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கையில் மாத்திரம் அதிபர் - ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை கற்பித்தல் செயல்பாடுகளுக்கு அப்பால், வலய கல்விப் பணிமனை மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றினால் அழைக்கப்படும் கூட்டங்கள் மற்றும் செயற்பாடுகளில் ஆசிரியர் அதிபர்கள் தொடர்பு பட மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image