1.700 ரூபா சம்பளத்தை வழங்க வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் போராட்டம்

1.700 ரூபா சம்பளத்தை வழங்க வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் இன்று (15) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிபடத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, பொகவந்தலாவ செல்வகந்தை சந்திவரை சென்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தால் பொகவந்தலாவ ஹட்டன் வீதி ஊடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

சுமார் மூன்று மணிநேரம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடுஇபொகவந்தலாவ நகர வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image