75 நாட்களின் பின் நிறைவுக்கு வந்த பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க பணிப்புறக்கணிப்பு

75 நாட்களின் பின் நிறைவுக்கு வந்த பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்று (15) நிறைவுக்கு வந்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உயர் கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக, தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த மே 02ஆம் திகதி முதல் தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைள முன்வைத்து, முன்னெடுக்கப்பட்டு வந்த குறித்த பணிப்புறக்கணிப்பு 75 நாட்களின் பின் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image