வேலைநிறுத்தங்களால் நாட்டுக்கு வருமானம் வராவிட்டால் சம்பளம் வழங்க முடியாது - அமைச்சர் பந்துல

வேலைநிறுத்தங்களால் நாட்டுக்கு வருமானம் வராவிட்டால் சம்பளம் வழங்க முடியாது -  அமைச்சர் பந்துல

வேலைநிறுத்தம் காரணமாக நாட்டுக்கு வருமானம் கிடைக்காவிட்டால் சம்பளம் வழங்க முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் எவ்வாறாயினும் இன்று வழங்கப்படும் என திறைசேரி தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரி திணைக்களம், கலால் திணைக்களம், சுங்க திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பவற்றினூடாக நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தினூடாகவே அரச ஊழியர்களது சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

இவற்றினூடாக கிடைக்கும் வருமானம் கிடைக்காத பட்சத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு என்பவற்றை வழங்குவது சிரமம். இலங்கை மத்திய வங்கி கடந்த காலங்களில் ஒவ்வொரு அரசாங்கத்தின் கீழும் பணத்தை அச்சிட்டுள்ள போதிலும், தற்போது இலங்கை மத்திய வங்கி எக்காரணம் கொண்டும்; பணத்தை அச்சிட முடியாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image