சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாயின், ஜனவரி முதலாம் திகதி முதல், பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
All Stories
புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகி இரண்டு வாரங்களுக்குள் சகல பாடசாலைகளிலும் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைப்பதில் பாடசாலை பிரதானிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், செயற்திறன் மிக்க அரச சேவையைப் பேணுவதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்கள், வன்முறைக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின், குடும்ப சுகாதாரப் பிரிவின் வைத்தியர் நெதாஞ்சலி மாபிடிகம தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்திற்காக ஊழியர்களுக்கு வழங்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையினால் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,183 சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கடந்த வருடம் முதல் இதுவரையான காலப்பகுதியில் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட 1500-இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண அரச சுகாதார சேவை நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் சங்கம் நாளையும் (19), நாளை மறுதினமும் (20) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
மழையுடனான வானிலை காரணமாக வட மாகாணத்திலுள்ள 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பாடசாலை அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் ஆளுநர்களின் நடவடிக்கைகளினால் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.