தற்போதைய அரசாங்கத்தினால் பயிலுநர் பட்டதாரிகளாக இணைத்துக்கொள்ளப்பட்ட 6434 பட்டதாரிகள் பயிற்சியை இடைநிறுத்தியுள்ளனர் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று *19) தினமின பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
பயிலுநர் பட்டதாரிகளாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இவ்வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 58, 116 பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். எனினும் அவர்களில் 6434 பேர் தமது பணியை விட்டு சென்றமையினால் 51, 682 பேர் மாத்திரமே தற்போது நிரந்தர நியமனத்திற்காக காத்திருக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க, குறித்த பட்டதாரிகளை இவ்வாண்டு டிசம்பர் மாதம் நிரந்தர நியமனத்திற்கு இணைத்துக்கொள்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தபோதிலும் நியமனக் கடிதங்கள் வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் தமக்கு கிடைக்கவில்லையென்றும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.