புதிதாக பணியாளர்களை இணைக்கும் அமெரிக்க நிறுவனம்!

புதிதாக பணியாளர்களை இணைக்கும் அமெரிக்க நிறுவனம்!

விமான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான ‘பிராட் அண்ட் விட்னி’, இவ்வாண்டு மேலும் 250 முழுநேர ஊழியர்களை பணிக்கு இணைத்துக்கொண்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமாக பிராட் அண்ட் விட்னி, 2020ம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 2000 ஊழியர்களுடன் இயங்கிய நிறுவனமாகும். இந்நிலையில் கொவிட் 19 தொற்று காரணமாக குறித்த நிறுவன சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து 2020ம் ஆண்டு 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு வந்ததையடுத்து கடந்த ஆண்டு 250 ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொண்டது.

தற்போது புதிதாக பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், தயாரிப்பு உதவியாளர்கள் ஆகியோரை மீண்டும் சேவையில் இணைத்துள்ளது. ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனமான ‘ரோல்ஸ்-ராய்ஸ்’, எதிர்வரும் இரு ஆண்டுகளில் சிங்கப்பூரில் 280 பேரை புதிதாக பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image