​வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறையில்!

​வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறையில்!

நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள சிற்றூழியர்கள் இன்றும் (03) நாளையும் (04) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

சிற்றூழியர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகள் முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் சங்கத்தின் பிரதான செயலாளர் டம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

 

12 கோரிக்கைகள் முன்வைத்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். வைத்தியசாலைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தரமான சுகாதார சேவையை வழங்குவற்கு வசதிகள் அவசியம். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் காலம் கடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image