கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு விற்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக இன்று (01) கொழும்பில் பல அரச நிறுவன தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தின.
தேசிய தொழிற்சங்கங்களின் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று பகல் 12.00 மணிக்கு இப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இலங்கை மின்சாரசபை தலைமையகத்திற்கு முன்பாக, கொழும்பு மாநகரசபை முன்பாக, அரச அச்சுத் திணைக்களத்திற்கு முன்பாக, தேசிய வருமான மற்றும் மக்கள் வங்கி முன்பாக, இரத்மலான கொழுமடம சந்தியில் அமைந்துள்ள நீர் வழங்கல் அலுவலகம், தேசிய வைத்தியசாலை முன்பாக மற்றும் களுபோவில, ஜயவர்தனபுர ஆகிய வைத்தியசாலைகள் முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன் எதிர்ப்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.