கொவிட் 19 தடுப்பு மருந்து வழங்குவதில் சுவசெரிய ஊழியர்களுக்கு முன்னுரிமை

கொவிட் 19 தடுப்பு மருந்து வழங்குவதில் சுவசெரிய ஊழியர்களுக்கு முன்னுரிமை

சுவசெரிய நோயாளர் காவு வண்டி ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அடிப்படை சுகாதார சேவைகள், தொற்று, கொரோனா தடுப்பு அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள சுவசெரிய நிலையத்தை பார்வையிட சென்றபோது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய கொவிட் 19 பரவல் காலப்பகுதியில் மிக முக்கியமான சேவையை சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவையாளர்கள் வழங்குகின்றனர். அவர்கள் அரசின் கொவிட் கட்டுப்பாட்டு செயற்பாடுகளில் முன்னிலை சேவையாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image