விமானநிலையம் திறப்பது குறித்த ஆராய விசேட குழு

விமானநிலையம் திறப்பது குறித்த ஆராய விசேட குழு

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை மீள திறப்பதற்கு தேவையான பரிந்துரைகளை தயாரிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை, சுகாதார அமைச்சு மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த விசேட குழுவில் அடங்குவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதில் உள்ள நடைமுறை பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image