இங்கிலாந்தின் பர்மின்ஹம் நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சென்ற இலங்கைக் குழுவில் இருந்து 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
9 போட்டியாளர்களும் ஒரு முகாமையாளரும் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் இருவரை இங்கிலாந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு 180 நாட்கள் விசா இம்முறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.