நாளைய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் அறிவிப்பு

நாளைய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் அறிவிப்பு

நிதி இரஜாங்க அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் நாளை (08) முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தம் நடைபெறுமா இல்லையா என்ற இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் அஜீத் நிவாட் கப்ராலுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெறவுள்ள நிலையில் அவர் இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.

தனியார் பஸ்களின் லீசிங் கட்டணம் குறைத்தல் உட்பட பல கோரிக்கைளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கோரி தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கெமுனு விஜேரத்ன அறிவித்திருந்தார்.

இவ்வறிவிப்பையடுத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று தொடக்கம் மீளறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image