அடையாள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கும் ஆசிரியர் சங்கங்கள்

நாளை (05) வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கான ரூபா 1000 சம்பள கோரிக்கைக்கான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு மலையக ஆசிரிய தொழிற்சங்கங்களும் தமது பூரண ஆதரவை வெளிட்டுள்ளனர்.

இன்று (04.01.2021) வியாழக்கிமை மதியம் அட்டனில் நடைபெற்ற ஊடக சந்தப்பில் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொது செயலாளர் ரெங்கராஜ் சங்கரமணிவண்ணன். ஆசிரிய விடுதலை முன்னனியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ் நாதன், காங்கிரஸ் கல்வியல் ஒன்றியத்தின் பொறுப்பாளர் கணபதி கனகராஜ், மலையக ஆசிரிய முன்னயின் இணைப்பாளர் என்.வி.கிங்ஸ்லி ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர். மலையகத்தின் அனைத்து ஆசிரியர்களும் தமது சமூகத்தின் சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு செல்லாது சுகயீன விடுமுறை அறிவிக்க வேண்டும் என அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

மேலும் காங்கிரஸ் கல்வியல் ஒன்றியத்தின் பொறுப்பாளர் கணபதி கனகராஜ் வர்த்தக சமூகத்தினரும் உட்பட அனைத்து தரப்பினரும் தமது இந்த அடையாள வேளை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்கு முன் வந்திருப்பதாகவும் எனவே நாளை மலையகம் முடங்கும் என்றும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image