​வௌிநாட்டு ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்கிய மெக்டொல்ட்ஸ்

​வௌிநாட்டு ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்கிய மெக்டொல்ட்ஸ்

Westlite Juniper, The Leo ஆகிய தங்கும் விடுதிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் McDonald's விரைவு உணவு நிறுவனம், இலவசமாக உணவு வழங்கியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, நேற்று மாலை நிறுவனம் அவர்களுக்கு உணவளித்து உபசரித்தது.

ஆளுக்கு இரண்டு துண்டு Chicken McCrispy, Apple Pie எனும் ஆப்பிளால் செய்யப்பட்ட இனிப்புச் சிற்றுண்டி வகை, டின் குளிர்பானம் ஆகியவை அளிக்கப்பட்டன.

சைவ உணவு உண்பவர்களுக்கும், தனியாக உணவு வழங்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு McDonald's நிறுவனத்தின் சிங்கப்பூர்க் கிளையின் பொது மேலாளர் பெஞ்சமின் போவும் சில ஊழியர்களும் உணவு விநியோகித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இவ்வாண்டு சவால்மிக்க ஒன்றாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார் திரு போ. அவர்கள், சிங்கப்பூர் சமூகத்துக்குப் பெரும் பங்காற்றி வருவதையும் அவர் சுட்டினார்.

நன்றி தெரிவிக்கவே ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

McDonald's நிறுவனம் மின்னிலக்கத் தீபாவளி வாழ்த்து அட்டை ஒன்றையும் உருவாக்கியுள்ளது. எனவே, அவர்கள் வெளிநாட்டில் உள்ள அவர்களது உற்றார் உறவினருக்குத் தீபாவளி வாழ்த்தைத் தெரிவிக்க அது உதவியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

மூலம் - செய்தி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image