சிங்கப்பூர் மனித வள அமைச்சின் அறிவிப்பு

சிங்கப்பூர் மனித வள அமைச்சின் அறிவிப்பு

புதிதாக பணிக்கு அமர்த்தப்பட்ட புலம்பெயர் வீட்டுப்பணிப்பெண்களாக பணிக்கு அமர்த்தி 3 மாதங்களுக்குள் முகவர்கள் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய எஜமானர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி நிலைமையை கண்டறிய வேண்டும் என்று சிங்கப்பூர் மனித வள அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் பணிக்கு அமர்த்தப்படும் அனைத்து புலம்பெயர் வீட்டுப் பணிப்பெண்கள் குறித்தும் பணிக்கு அமர்த்தும் முகவர்கள் மூன்று மாதத்திற்குள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அமைச்சு அதன் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்நடைமுறையானது தொழில்வழங்குநர் மற்றும் பணியாளர்களுக்கிடையிலான புதிய உறவை பலப்படுத்த உதவும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image