சென்னை விமான நிலையத்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது!

சென்னை விமான நிலையத்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது!

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் போன்று நாடகமாடி இலங்கையர் ஒருவரிடமிருந்து தங்கத்தை கொள்ளையடிக்க முயற்சி இரு இலங்கையர்கள் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர் என்று த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

கடந்த திங்கட் கிழமை இலங்கையில் இருந்து சென்ற நதீஷா ரோஷினி என்ற 47 வயது இலங்கையரே இவ்வாறான ஒரு சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார் என்று சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொஹமட் நஜ்மின் (31), செல்லையா அரவிந்தன் (40) ஆகிய இரு இலங்கையர்களே இம்மோசடி குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளனர். குறித்த பெண் விமானநிலையத்தில் இருந்து வௌியேறிய சந்தர்ப்பத்தில் வௌியில் தம்மை சுங்க அதிகாரிகள் என்று குறித்த நபர்கள் அறிமுகம் செய்துக்கொண்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றனர். சந்தேகமடைந்த அவர், சுங்கத்துறையிலும் பொலிஸிலும் அவர்கள் மீது முறைப்பாடு செய்துள்ளார். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image