லஞ்ச ஊழல் குற்றஙகளில் ஈடுபட்ட 600 பேருக்கு இடமாற்றம்

லஞ்ச ஊழல் குற்றஙகளில் ஈடுபட்ட 600 பேருக்கு இடமாற்றம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பல்வேறு லஞ்ச ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட 600 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர். ஜே. ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கனான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திடீரென மோட்டார் வாகன திணைக்களத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பொதுமக்களிடம் நடத்திய விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இந்த இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உட்பட 600 பேர் இடமாற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image