அரசின் கீழியங்கும் நிறுவன ஊழியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு

அரசின் கீழியங்கும் நிறுவன ஊழியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு

அரசின் கீழியங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிபந்தனைகளுடன் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, கூட்டுத்தாபனம் உட்பட அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவான 5000 ரூபாவை வழங்குவதற்கான சுற்றுநிரூபம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திறைச்சேரிசெயலாளர் எஸ். ஆர் ஆட்டிகலவின் கையெழுத்துடன் அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளுக்கமைய, இம்மாதம் கொடுப்பனவு வழங்குவது தொடர்பான தீர்மானத்தை பணிப்பாளர்கள் சபை மேற்கொள்ளவுள்ளது.

அதற்கமைய, சம்பளமற்ற விடுமுறையில் உள்ள ஊழியர்களுக்கு இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்றும், அரைவாசி கொடுப்பனவுடன் விடுமுறையில் உள்ள ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவில் 50 சதவீதம் மாத்திரம் வழங்கப்படும். நாள் சம்பளத்திற்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைத்து வேலை நாட்களும் பணிக்கு சமூகமளித்திருப்பின் முழுமையான 5000 ரூபா வழங்கப்படும். அவ்வாறு இல்லையேல் சமூகமளித்த நாட்கள் கணக்கெடுக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image