ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி கொழும்பில் போராட்டம்

ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி கொழும்பில் போராட்டம்

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்றைய தினம் கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாகவே குறித்த நியமனம் இதுவரை வழங்கப்படாதுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்படவிருந்த நிலையில், அது மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அரசாங்கத்தினால் உடனடியாக அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image