நுவரெலியாவில் 500 படுகை வசதிகளுடன் கொவிட் -19 இடை பாராமரிப்பு நிலையம்

நுவரெலியாவில் 500 படுகை வசதிகளுடன் கொவிட் -19 இடை பாராமரிப்பு நிலையம்

நுவரெலியாவில் உள்ள நகர சபை (டவுன் ஹோல்) கட்டிடத்தை இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் உள்ள 112 ஆவது படைப் பிரிவு மற்றும் 3 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் கொவிட் -19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் அவசர காலத்தின் தேவைக்காக 72 மணி நேரத்திற்குள் இந்த பாராமரிப்பு நிலையம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இடைநிலை பராமரிப்பு நிலையமானது நுவரெலியா மேயர், சுகாதார அதிகாரிகள், மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடனும்; மத்திய பாதுகாப்பு படைத் தளபதியின் ஒருங்கிணைப்பில் 500 கொவிட் -19 தொற்றாளர்களை அவசரமாக தங்க வைக்க கூடிய வகையி;ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படையணிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள், இதற்கு தேவையான படுக்கைகள், மெத்தைகள், தலையணைகள், படுக்கை விரிப்பு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த இடைநிலை பராமரிப்பு நிலையமானது கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் 11 ஆவது படைப் பிரிவு மற்றும் 112 பிரிகேட்டின் தளபதிகளின் ஒருகிணைப்புடன் செயற்பாட்டுக்கு வந்தது.
நுவரெலியவில் உள்ள 3 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் இந்த புதிய இடைநிலை பராமரிப்பு நிலையத்துகு தேவையான அனைத்து மின் இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image