வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ள அனுமதி

வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ள அனுமதி

நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, 'உயிர் பாதுகாப்பு குமிழி' (Bio Bubble) முறைமையில் சுற்றுலா மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த முறைமைக்கு அமைய சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image