தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு!

தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி, தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று உரியத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவலின்படிஇ தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துஇ வாக்காளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

எவ்வாறாயினும்இ தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல்வேறு தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி தபால் மூல வாக்குகளை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவடைவதோடுஇ எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image