பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் குறித்த அறிவிப்பு விரைவில் - மனுஷ நாணயக்கார

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் குறித்த அறிவிப்பு விரைவில் - மனுஷ நாணயக்கார

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதி அறிவிப்பார் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்துக்கான மத்திய நிலையம் நேற்று (07) திறந்து வைக்கப்பட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் உரையாற்றியபோது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னதாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிடுவாரென தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image