தொழிற்சங்கங்களின் கறுப்பு வாரம் இன்று முதல்

தொழிற்சங்கங்களின் கறுப்பு வாரம் இன்று முதல்

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று முதல் கறுப்பு எதிர்ப்பு வாரத்தை அறிவித்துள்ளன.



கனியவளம், துறைமுகம், குடிநீர், மின்சாரம், வங்கித்துறை, மருத்துவம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களின் சங்கங்களினால், இந்த கறுப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளன.

இதற்கமைய இன்று மதியம் 12 மணிக்கு, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image