உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஒத்திவைப்பு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஒத்திவைப்பு

இன்று (22) புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு போதுமான ஆசிரியர்கள் விண்ணப்பிக்காத நிலையில் இவ்வாறு மதிப்பீட்டு பணிகளை ஒத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பரீடசை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பாக சிக்கல் நிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்த பணிகளில் ஈடுபடுபவர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாகவும் எனவே இவ் அதிகரிப்பு விடயம் தொடர்பான திறைசேரியின் அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் விடைத்தாள்  மதிப்பீடடுக்கான விண்ணப்பங்களை கோர தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் பரீடசைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
 
உயர்தர பரீடசைகள் கடந்த 17.02.2023 அன்று முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image