மாணவர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்புக்கான அனுமதி சமூக வீழ்ச்சிக்கு வித்திடும்!

மாணவர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்புக்கான அனுமதி சமூக வீழ்ச்சிக்கு வித்திடும்!

பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய திட்டத்தின் மூலம் நாட்டில் பெரும் சமூக வீழ்ச்சி ஏற்படக்கூடும் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இன்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகளுக்கு 20 மணித்தியாலங்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சட்டங்களை திருத்த உத்தேசித்துள்ளது என்றும் கூறினார்.

நாட்டில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ள வேளையில், கல்விக்கான திட்டத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது குறித்து அரசாங்கம் சிந்தித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். "அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?" என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ, இதன் மூலம் பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகளை எதிர்காலத்தில் வேலைக்காக விரைவில் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image