இலங்கையில் பரவும் ஆபத்தான கொவிட் 19 வைரஸ்

இலங்கையில் பரவும் ஆபத்தான கொவிட் 19 வைரஸ்

இலங்கையில் தற்போது பரவிவரும் BA.4 மற்றும் BA.5 கொரோனா வைரஸூகள் மிகவும் ஆபத்தானவை, இவ் வைரஸூகளானது தொற்றாளர்களின் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வளவாளரும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் வைரஸ் தொடர்பான வைத்திய ஆலேசகர் வைத்தியர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது பரவி வரும் BA.4 மற்றும் BA.5 கொவிட் -19 வைரஸ் தொற்றுகள் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் வைரஸ்களில் மிகவும் வேகமாக பரவும் வைரஸாகும் என தெரிவித்துள்ள வைத்தியர் சஞ்சய் பெரேரா, ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் இந்த வைரஸூகள் மிக வேகமாக பரவுகின்றன என்றார்.

தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான செயற்பாடாகும். அதேபோல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதும் மிகவும் அவசியமானது. நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் வைரஸ் பரவ ஆரம்பிக்குமாயின் மிக மோசமான தாக்கங்களை மக்கள் முகங்கொடுக்க நேரிடும் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image