ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு வழி விட வேண்டும் - ஆசிரியர் விடுதலை முன்னணி

ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு வழி விட வேண்டும் - ஆசிரியர் விடுதலை முன்னணி

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் கைது செய்யப்பட்டதை ஆசிரியர் விடுதலை முன்னணி வண்மையாக கண்டிப்பதாக அதன் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஜனநாயக ரீதியாக போராடுகின்ற நேரத்திலே அதனை ஒடுக்கும் முகமான செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஆசிரியர் சமூகம் என்றுமே ஏற்றுக் கொள்ளாது என்பதை தாம் வழியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களிலே பல போராட்டங்களில் நாம் அவருடன் இனைந்து செயற்பட்டு இருக்கிறோம். சமூக முற்போக்கு சிந்தனைக் கொண்ட ஜோசப் ஸ்டாலின் அவர்களினை கைது செய்ததை தாம் வண்மையாக கண்டிப்பதோடு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இனி வரும் காலங்களில் இவ்வாறான ஜனநாயக விரோத் செயற்பாடுகளை செய்யாமல் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு வழி விட வேண்டும் என்பதையும் ஜோசப் ஸ்டாலின் அவர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தாம் இந்த இடத்தில் அரசுக்கு வழியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image