அநாவசிய பொதிகளுக்குத் தடை - தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம்

அநாவசிய பொதிகளுக்குத் தடை - தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம்

பயணகளின் பாதுகாப்பு கருதி அவசியமற்ற பொதிகளை ஏற்றுவதை தடுக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் தமது உடமைகளை பஸ்களில் பொதிகள் வைக்கக்கூடிய இடங்களில் தம்முடன் வைத்துக்கொள்ளுமாறும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன பயணிகளிடம் கோரியுள்ளார்.

தமக்குதாமே பாதுகாப்பு வழங்குவதில் கவனம் செலுத்தவேண்டிய நிலைக்கு நாம் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். இந்திய உளவுத்துறை விடுதலைப்புலிகள் தாக்கலாம் என்று தெரிவித்துள்ளதையடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பஸ் ஊழியர்களிடம் நாம் கோரியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image