மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்று நிமயனம்

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்று நிமயனம்

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்படவுள்ளன.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி 306 ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவிருந்தன.

எனினும் , புதிய நியமன வழங்கலை தற்காலிகமாக இடைநிறுத்தி நிதி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டமையினால், ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கள் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், குறித்த நியமனங்களை இன்றைய தினம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த நிகழ்வு பல்லேகலை, குண்டசாலையில் உள்ள மத்திய மாகாண கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில்  ஆசிரிய உதவியாளர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் 0719 761 150 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு நியமனங்களை உறுதிசெய்துகொள்ளுமாறு மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரட்ண தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image