நிரந்தர நியமனம் இதுவரை கிடைக்காத பயிலுநர் பட்டதாரிகள் கவனத்திற்கு

நிரந்தர நியமனம் இதுவரை கிடைக்காத பயிலுநர் பட்டதாரிகள் கவனத்திற்கு

இதுவரை நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத மற்றும் நியமனம் தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பட்டதாரிகள் தங்களது தகவல்களை வட்ஸ்அப் செய்யுமாறு அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

02.09.2020 நிரந்தர நியமனத்திற்கான கடிதங்கள் கிடைக்காமை, 2021 பெப்ரவரி/ மார்ச் பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்திற்கான இடம் குறிப்பிடப்பட்ட கடிதங்கள் கிடைக்காமை, மாகாணமட்டங்களில் நேர்முகத்தேர்வு நடத்த நடைபெற்றபோதிலும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமை, 2022 ஜனவரி சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினை, பாடசாலைகளில் பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வேறு அரச நிறுவனங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை, புதிய தேசிய பாடசாலைகளுக்கு பயிலுநர்களின் பெயர் பட்டியல் உரிய அதிகாரிகளினால் அனுப்பப்படாமை போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பட்டதாரிகள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு 28ம் திகதி மாலை 4.00 மணிக்கு முதல் தீர்வு கிடைக்காவிடின் 071 8178 268 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு ஜனவரி 30ம் திகதி மாலை 5.00 மணிக்கு முன்னர் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பிரச்சினை ஆகியவற்றை சுருக்கமாக குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறு அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்கூறப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 31ம் திகதி 10.00 மணிக்கு பொதுச்சேவை அமைச்சின் அதிகாரிகளுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராய்ச்சி உட்பட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image