அடையாள பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகும் அதிபர்கள் கூட்டமைப்பு

அடையாள பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகும் அதிபர்கள் கூட்டமைப்பு

நாளை மறுநாள் (28) நாடு முழுவதும் நாடு தழுவிய அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதிபர்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை தீர்க்கும் வகையில் இம்மாதம் 5ம் திகதி சுற்றுநிருபம் வௌியிடப்பட்டது. அதனூடாக அதிபர்களுடைய சம்பளத்தில் புதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியே இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒரே தினத்தில் நியமனம் பெற்ற, சமமான தகமைகளுடன் ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அதிபர்களை விட சம்பளம் அதிகரித்துள்ளது என்று அதிபர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆசிரியர் - அதிபர்களுடைய சம்பளத்தை அதிகரித்தமைக்கு அமைவாக கல்வி நிருவாக மற்றும் ஆசிரியர் கல்வி சேவை சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரி இலங்கை கல்வி நிருவாக சேவை சங்கம் நேற்று (26) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துதள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image