நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ள பயிலுநர் பட்டதாரிகள் கவனத்திற்கு

நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ள பயிலுநர் பட்டதாரிகள் கவனத்திற்கு

நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெற்ற ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த அபிருத்தி அதிகாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் (13) திகதி காலை 11.30 மணிக்கு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் நியமனக் கடிதங்கள் பெறவிருக்கும் பயிற்சி பெற்ற இணைப்பு 1 இல் பெயர் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு அபிவிருத்தி அதிகாரிகள் கடமைககளை பொறுப்பேற்பதற்கான திகதி மற்றும் நேரம் எனபன இணைப்பு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றைக் கவனத்திற்கொண்டு கடமைகளை பொறுப்பேற்பற்கு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்க 30 மணி நேரத்திற்கு முன்னர் காலி மாவட்டச் செயலகத்தின் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்துக்கு வருகைத் தருமாறு கோரப்படுகின்றனர் காலி மாவட்ட மேலதிக செயலாளர் லலிந்த கமகே கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

அன்றைய அபிவிருத்தி அதிகாரிகளாக புதிதாக நியமனம் பெறுவோருக்கான நியமனம் கடிதங்கள் ஹோல் தி கோல் மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளமையினால் இணைப்பு 2இல் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் காலை 10.30 மணியாகும் போது குறித்த மண்டபத்திற்கு வருகைத் தருமாறும் 2ம் இணைப்பில் பெயர் குறிப்பிடப்பட்ட கடமைப் பொறுப்புக்களை பொறுப்பேற்போர் காலை 8.30 மணி தொடக்கம் 10.00 மணி வரை வருகைத் தந்து கடமைப் பொறுப்புக்களை பொறுப்பேற்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேவேளை, குறியிடப்பட்டுள்ள பயிலுநர் பட்டதாரிகளின் நியமனக் கடிதங்கள் இதுவரை மேலதிக மாவட்டச் செயலாளருக்கு கிடைக்காமையினால் அவர்களை குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை கவனத்திற்கொள்ளத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image