விமான நிலைய ஊழியர்களுக்கு 25,000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படுமா?

விமான நிலைய ஊழியர்களுக்கு 25,000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படுமா?

கட்டுநாயக்க இலங்கை சுதந்திர ஊழியர்கள் சங்கம் ஊழியர்களுக்கு 25,000 ரூபா சம்பள அதிகரிப்பு உட்பட 11 கோரிக்கை விமான நிலைய நிருவாக அதிகாரிகளுக்கு முன்வைக்க தீர்மானித்துள்ளது.

இன்று (11) நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் எம்.டப்ளியு. டி. முகந்திரம் தெரிவித்துள்ளார்.

அக்கோரிக்கைகளுக்குள் மத்தள விமானநிலைய எரிபொருள் நிரப்பு நிலையங்களை பாதுகாத்தல், விமான நிலைய வாகன நிறுத்துமிடங்களை மீள போன்ற கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image