பல கோரிக்கைகளை அரச ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் போராட்டம்

பல கோரிக்கைகளை அரச ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் போராட்டம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரித்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 29ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் மற்றும் வேதன அதிகரிப்பிற்கான தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன அறிவித்துள்ளன.

நவம்பர் மாதம் 29ம் திகதி நன்பகல் 12.00 மணிக்கு அரச அலுவலகங்களுக்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரச அதிகாரிகளின் சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரித்தல், அரச அதிகாரிகள் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்தல், கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கான தடையை நீக்கல், அரச ஊழியர்கள் நாட்டுக்கு பாரம் என்ற கருத்தை வாபஸ் பெறல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அபிவிருத்தி அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், முகாமைத்துவ சேவை அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அதிகாரிகள், அனைத்து துறை அதிகாரிகள், கனிஷ்ட ஊழியர்கள், தபால் மற்றும் ரயில் திணைக்கள ஊழியர்கள் இ்ப்போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image